
posted 14th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மத் ஹனிபா அவர்களின் நெறிப்படுத்தலில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திகாாடுல்ல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி. கலையரசன், அம்பாறை மாவட்ட மற்றும் பிரதேச மட்ட திணைக்களத் தலைவர்கள், சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சமூக மட்ட அமைப்புகளின் தலைவர்கள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுக்களும் எட்டப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)