
posted 6th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த மதுஷிகனுக்கு கௌரவமளிப்பு
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த தவேந்திரன் மதுஷிகன் இளம் வயதில் பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப்படைத்துள்ளார்.
இந்த முயற்சிக்கு 231 ஆவது இராணுவ படைப்பிரிவினால் கல்லடி இராணுவ முகாமில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த மாணவனின் சாதனையினை பாராட்டி மட்டக்களப்பு பாடுமீன் கழகத்தின் தலைவர் புஸ்பாகரனினால் பணப்பரிசில் வழங்கப்பட்டது.
இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து நினைவுச் சின்னமொன்றினை வழங்கி கௌரவமளித்துள்ளனர்.
இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30 கிலோமீற்றர் தூரமுடைய பாக்கு நீரினையை சுமார் 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.
இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)