
posted 13th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பல நூறு ஏக்கரில் வெங்காயப் செய்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் மற்றும் குடத்தனை பகுதியல் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருடாந்தம் ஆனி, ஆடி மாதத்தில் இடம் பெறும் குறித்த வெங்காய பயிர் செய்கை வழமையை விட அதிகமாக இடம் பெற்று வருகிறது.
இவ்விரு கிராமங்குடன் சேர்த்து பருத்தித்துறை மந்திகை, தம்பசிட்டி, கரவெட்டி உட்பட்ட பல கிராம விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அம்பன் குடத்தனை வெங்காயத்திற்க்கா கேள்வி, மற்றும் விலை அதிகம் என்பது குறிப்பிட தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)