
posted 23rd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தீ விபத்தில் பளையில் தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்தழிந்தது
கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது.
குறித்த சம்பவம் நேற்று சனி (22) இரவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தும்புதொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)