
posted 3rd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும்
புலம் பெயர்ந்த தமிழரிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரவேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது அங்குள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் வைத்து எமது இன அழிப்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்க விரும்பாமல் தனக்கு விளங்கவில்லை ஆங்கிலம் தெரியாவிடின் தமிழில் கதைக்கும்படியும் கூறியிருந்தார்.
ஆங்கிலம் தெரியாவிடின் அது ஓர் பெரும்குற்றம் போல் சாடியிருந்தார். அந்த புலம்பெயந்தவர் ரணில் விக்கிரமசிங்க 80களில் அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் அச்சுறுத்தல் காரணமாக விரட்டி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இருக்கலாம்.
ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பில் புலம்பெயர் தேசத்தவரிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)