சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும்  - சந்திரகாந்தன்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் - சந்திரகாந்தன்

சாணக்கியனை அரசிலுக்குள் இழுத்து வந்தவர்கள் மற்றும் அவரை தமிழ்த் தேசியவாதியென்று நம்புபவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் கடந்த 16 வருடங்களுக்கு மேல் உடைந்து புனரமைக்கப்படாத நிலையிலிருந்த கற்சேனை விநாயகர் அணைக்கட்டின் மீள்நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காலநிலை மாற்றத்தினை எதிர்நோக்குவதற்கான பன்முகப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறை வேலைத் திட்டத்தின் கீழ் உலக வங்கியினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 12 மில்லியன் ரூபா செலவில் இந்த அணைக்கட்டு மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில்;

அண்மையில் விவசாய இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பு வருகை தந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைப்புகளின் வேண்டுகோள், பொறியியலாளர்களின் கணிப்பீடுகளின் அடிப்படையில் 530 மில்லியன் ரூபாவில் 22 வேலைத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அதில் இந்த விநாயகர் அணைக்கட்டு பெரிய வேலைத் திட்டமாக அடையாளம் காணப்பட்டிருந்தது. அதன் கீழ் இந்த வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவான வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தொடங்கியுள்ளோம். சுமார் நான்கு பில்லியன் அளவிலான வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சுமார் 15 பில்லியன் அளவிலான வேலைகளை செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எங்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர். அதிலும் சாணக்கியன் தான் அதிகளவான விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றார். அவர் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர். அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் 2030 என குறிப்பிட்டதில் உள்ளவற்றை அவரிடம் எங்குள்ளது என கேட்கவேண்டும்.

கவலையான விடயம் என்னவென்றால் அவருடைய தாய் இனத்தவருடன் இணைந்து எங்களது வீடுகளையும் அவர் எரிக்க வந்தார். கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சகோதர இன மாணவர்களுடன் இணைந்து எங்களது காரியாலயத்தினையும் எரிக்க முனைந்தார்.

அரசாங்கம் மாறவேண்டும், நாட்டில் மாற்றம்வேண்டும் என்று போராடியபோது சாணக்கியன் மாத்திரம் அவரது அரசியல் எதிரிகளான வியாழேந்திரன், பிள்ளையான் வீடுகளை எரிக்கவேண்டும் என்றும் ஆட்களை கொண்டு வந்து கல்லெறிந்தார். இதுதானா ஜனநாயகம் என்பதை அவர்கள் கேட்டுப் பார்க்க வேண்டும்.

சாணக்கியனும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்திருக்காவிட்டால் எமது வீட்டுக்கு கல் வந்திருக்காது. இவரை அரசியலுக்கு இழுத்துவந்தவர்கள், இவரை தமிழ்தேசியவாதியென்று நம்புபவர்கள் சிந்தித்து எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும் என்றார்.

சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும்  - சந்திரகாந்தன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)