
posted 3rd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காணி அபகரிப்பிலிருந்து விடுபட நடவடிக்கை
குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தை இராணுவ பிடியிலிருந்து விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தின் கட்டடங்கள் மைதானம் என்பன இராணுவத்தின் பிடியில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் அறிக்கை தருமாறு ஆளுநர் கேட்டிருந்தார்.
இதையடுத்து இந்த விடயத்தை அங்கு சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அந்தப் பகுதிக்கு சென்றார். இதன்போது, கல்வித்துறை சார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதன்போது, பாடசாலையின் 2.9 ஏக்கர் காணியுடன் மேலதிகமாக 5 ஏக்கர் காணியையும் இராணுவம் பயன்படுத்துகிறது என்று அறியப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை தயாரித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)