
posted 1st July 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரன் உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன் போது மட்டகளப்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சி னைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தின் தற்போதைய சுய நிலைத்தன்மையை மேம்படுத்த புதிய வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)