
posted 24th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மக்கள் நம்பிக்கை கொள்ளலாமா?
கடந்த வாரம் இலங்கை இந்திய இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பல முன்னுதாரணங்களை கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்பெற வைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை இரா துரைரெத்தினம் கருத்து வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பான பல விடயங்களைப் பேசி இருந்தாலும் இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை முதன்மைப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதென்பது ஒரு வரவேற்கக் கூடிய விடயமாகும்.
இரண்டு நாடுகளும் முரண்படக் கூடாது என்னும் விடயத்தில் அக்கறை காட்டியதை அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தது. பல ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்றிருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்ட ஒப்பந்தமானது நிராகரிக்க முடியாதவை
அதிகாரப் பரவலாக்கல் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டாலும் சில விடயங்களை திருத்தி அமைப்பதற்கும், இல்லாமலாக்குவதற்கும், இரத்துச் செய்வதற்கும், பல விடயங்களை உள்ளடக்குவதற்கும் அரசியல் யாப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர். 35 வருடங்களுக்குள் பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதென்பது ஒரு வகையில் வரவேற்கக் கூடிய விடயமாகும்.
எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அமுலாக்குவதற்கு இரு நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள இனங்கள் அனுமதிக்குமா? பெரும்பான்மையானோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சர்வதேசத்திற்கு சொல்லுவதற்கு நியாயங்கள் உள்ளதா? மிகவும் சிறுபான்மையான இனம் தங்களின் உரிமைகளை, நியாயாதிக்கத்தை கேட்கும் போது நிராகரிக்கக் கூடாது.
எனவே இவ்விடயத்தில் அனைத்தின மக்களும் நன்மை பெறக் கூடியதாக உள்ளதால் கிராமம் தோறும் சென்று சமூகத்திற்கு சேவை செய்வதற்கு வழி வகுக்கும் பட்சத்தில் அனைத்தின மக்களும் நன்மை பெறுவதோடு சுபீட்சமான நாடு உருவாகும் என தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)