
posted 7th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தனி நபர்களுக்கு தடை
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முகப்புத் தோற்றத்தை (பள்ளிவாசலின் படம்) எக்காரணம் கொண்டும் தனிநபர் யாரும் பயன்படுத்துவது பள்ளிவாசல் நிர்வாகத்தினால் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலத்தில் பள்ளிவாசலின் படத்தைப் போட்டு சட்டத்திற்கு முரணான முறையில் தனிநபர் ஒருவரால் முகப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் படத்தினை பெரிய பள்ளிவாசலின் அனுமதி இல்லாமல் தனிநபர் யாரும் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு மீறி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)