
posted 12th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம்
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை செவ்வாய் அன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இக்காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் IBC ஊடகத்தின் தலைவர் திரு. பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)