
posted 21st July 2022
இலங்கையில் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடு முழுவதும் இன்று தொடக்கம் (21) நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது;
- 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும்,
- 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளிலும்,
- 6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை, 21 முதல் 24 வரையான திகதிகளில் கொழும்பின் பல இடங்களில் எரிபொருள் பெறுவதற்காக கியூ.ஆர் குறியீடு பரிசோதிக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY