
posted 27th July 2022
அரசினுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுடைய போராட்டத்துக்கு மதிப்பளி
நாட்டைக் கொள்ளை அடிக்காதே
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு
போன்ற பதாகைகளை ஏந்தி விரிவுரையாளர்கள் கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY