மதகுருமார்களுக்கும்,  மாற்றுத்திறனாளிகளுக்கும் நுணாவில் ஐ.ஓ.சியில் எரிபொருள்

வடமாகாணத்தில் உள்ள சர்வ மதகுருமார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 27/07 புதன்கிழமை நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கி வைக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வை. சிவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் வைத்தியசாலை செல்வதற்கும் , தமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேபோன்றே மதகுருமார்களும் தமக்குத் தேவையான எரிபொருளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு மதகுருமார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபாய்க்கும், முச்சக்கரவண்டிக்கு 2500 ரூபாய்க்கும், கார்களுக்கு 3000 ரூபாய்க்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

மதகுருமார்களுக்கும்,  மாற்றுத்திறனாளிகளுக்கும் நுணாவில் ஐ.ஓ.சியில் எரிபொருள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY