
posted 2nd July 2022
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைப் பிரதேசத்தில்லுள்ள தெரிவு செய்யப்பட்ட 25 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தமிழர் தேசியப் பேரவையினரால் தலா பத்தாயிரம் ரூபா வீதம் 2,50,000/- பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் வசிக்கும் திரு, ச. கபிலன் என்பவரது நிதி பங்களிப்பிலேயே இவ் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழர் தேசியப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரான திரு. தரணிகன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழர் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY