ஜனாதிபதி ரணிலை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக அரகல போராட்ட ஆதரவாளர்களால் இன்று மாலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'அரகல போராட்டகாரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம், முடிவல்ல இதுவே தொடக்கம், போராட்ட பூமியில் மக்கள் உணர்வுகளை தீண்டாதே, வேண்டாம் வேண்டாம் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் குரலை நசுக்காதே, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளி' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ரணிலை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY