காட்டுக்கு தீ மூட்டிய மர்ம நபர்கள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை - புளியந்துறை காட்டுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ மூட்டியுள்ளனர். இதனால் காடு தீப்பற்றி எரிந்தது.

இதன்போது வலி. மேற்கு பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற வலி. மேற்கு பிரதேச சபையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அப்பகுதிக்கான கிராம சேவகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

காட்டுக்கு தீ மூட்டிய மர்ம நபர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY