கா. ஆ. தியாகராசா காலமானார்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மரபு வழி அறங்காவலரும் வாழ்நாள் தலைவருமான கா. ஆ. தியாகராசா (வயது 84) காலமானார்.

இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூரிலுள்ள அவரின் இல்லத்திலேயே அவர் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகளை நயினாதீவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அன்னார், உதவி அரசாங்க அதிபராக சேவையாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கா. ஆ. தியாகராசா காலமானார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)