இயந்திரப் படகு பழுதடைந்ததால் கடலில் தத்தளித்த மீனவர்கள்

அம்பாந்தோட்டை ஆழ்கடலில் தத்தளித்த வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த 9ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க இயந்திரப் படகில் மூன்று மீனவர்கள் சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்ற இயந்திரப் படகின் இயந்திரம் பழுதடைந்ததால் மூன்று மீனவர்களும் அம்பாந்தோட்டை கடற்பரப்பில் தத்தளித்துள்ளனர்.

இவ்வாறு தத்தளித்த மூன்று மீனவர்களும் கப்பல் ஒன்றின் மீது நேற்று முன் தினம் வியாழக்கிழமை (14) மீட்கப்பட்டு, காலி துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீனவர்கள் சென்ற 34 அடி நீளமான இயந்திரப் படகை கரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இயந்திரப் படகு பழுதடைந்ததால் கடலில் தத்தளித்த மீனவர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY