
posted 27th July 2022
வவுனியாவில் சைக்கிள்களில் இரவு நேரத்தில் பயணிப்போர் டைனமோ வெளிச்சம் பொருத்துவது கட்டாயம். அத்துடன், வீதி விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்னையால் வவுனியா மாவட்டத்திலும் சைக்கிள் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், கடந்த வாரங்களில் 15இற்கும் மேற்பட்ட பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விபத்துகளுக்கு காரணம் இரவில் வெளிச்சமின்றி பயணிப்பதே. எனவே வவுனியா மாவட்டத்தில் சைக்கிள்களில் செல்வோர் டைனமோ பொருத்தியிருக்க வேண்டும். அத்துடன், சைக்கிள்களில் பரவலாக செல்வதை தவிர்ப்பதுடன், வீதி விதிகளையும் பின்பற்ற வே்ணடும். இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY