ஏ - 9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் வழங்கக் கோரி ஏ - 9 வீதியை மறித்து யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் நேற்று ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காகக் காத்திருந்தவர்களே ஏ - 9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததால் அங்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்களே வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ - 9 வீதி வழியான போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் தடைப்பட்டுக் காணப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் மற்றும் போராட்டகாரர்கள் யாழ். மாவட்ட செயலருடன் கலந்துரையாடினர்.

காத்திருப்பவர்களுக்கு எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

ஏ - 9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY