
posted 8th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மண்முனைமேற்குமாதர் சங்கத்தின் பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விற்பனை கண்காட்சியானது பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் வவுணதீவில் இடம்பெற்றது.
மாதர் சங்க பயிற்சி நிலையத்தினால் உருவாக்கப்பட்ட ஆடைகள், கைவண்ண பொருட்கள் எனப் பல தரப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டதுடன் அவை விற்பனையும் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள சிரேஷ்ட தையல் போதனாசிரியை , நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)