
posted 4th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வருட இறுதி நிகழ்வுகள்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வருட இறுதி நிகழ்வுகள் வைத்தியசாலையின் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில், "நோயாளர்களுக்கான மருத்துவக் கையேடு" எனும் இரு புத்தகங்களின் வெளியீடு இடம் பெற்றது. இது வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் MNM. யூசுப் அவர்களினால் வெளியிடப்பட்டது. வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்கள்,ஊழியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா.
கல்முனையின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி SR. இஸ்ஸதீன் அவர்களுக்கான வரவேற்பு மற்றும் பாராட்டு விழா. உத்தியோகத்தர் ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றன. மேற்படி நிகழ்வுகளோடு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி SR. இஸ்ஸதீன் அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)