
posted 24th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுதுமலையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள சுதுமலையில் கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். இவர்களில், 13 பேர் சிறுவர்களாவர். அதிலும் இவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப் தலைமையிலான குழுவினர் வீடு தரிசிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டது.
இதனிடையே, வீட்டு வளாகத்தில் நுளம்பு குடம்பி கண்டுபிடிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் குற்றவாளிகளாக காணப்பட்ட அவர்களுக்கு தலா 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)