
posted 11th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
காலநிலையினால் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு இன்று (11) முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக (SEUSL) ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 2024 ஜனவரி 16ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களியோடை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்படி பல்கலைக்கழகத்தின் அயல் பகுதிகள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)