
posted 1st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உருளைகிழங்கு விதை பழுதடைந்ததால் இழப்பீட்டிற்கு நடவடிக்கை
சுன்னாகம் குப்பிழானில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் வழங்கப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் ஒருவகை பற்றீரியா தாக்கத்துக்கு உள்ளானநிலையில் இது குறித்த ஆய்வறிக்கையை அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த விவகாரம் தொடர்பில், தரகுப் பணம் கைமாற்றப்பட்டமைக்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டன.
மேலும், குறித்த விடயத்தில், தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)