
posted 6th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் போதுமானவை - ஜனாதிபதி ரணில்
13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை. அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் யாழ். மாவட்ட தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை என்றும் கூறினார்.
13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்கள் மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். மேலும், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)