
posted 28th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வர்த்தகர்களை எச்சரிக்கும் யாழ் அரசாங்க அதிபர்
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் யாழ்ப்பாணம் மாநகரம், திருநெல்வேலி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வெள்ளி அன்றிலிருந்து (26) தமது சுற்றுப்புறங்களை துப்பரவு செய்ய வேண்டும் என்று யாழ். மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
கடந்த 23ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த யாழ். மாநகரம், திருநெல்வேலி பகுதிகளின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் இடங்களை துப்புரவு செய்யவேண்டும்.
இந்த செயல்பாட்டுக்கு ஒத்துழைக்காத - டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய சூழலை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)