
posted 20th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் பெருவிழா
கத்தோலிக்க யாத்திரையை தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரசித்திபெற்ற புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (20) சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் காலை 07.00 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அச்சுவேலி பங்குத்தந்தை மைக்கல் செளந்தரநாயகம் ஒப்புக் கொடுத்தார்.
வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக பொறுப்பாளர், தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர் றமேஸ் அடிகளாரும் இணைந்து திருப்பலியை சிறப்பித்ததோடு திருப்பலி நிறைவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததோடு தங்களது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)