
posted 10th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழையினால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால் நீர் வரத்தை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் நேற்று முன்தினம் (08) திறந்துவிடப்பட்டிருந்ததோடு, நீர் வரத்து அதிகரித்த நிலையில் நேற்று (09) நான்கு வான் கதவுகளும் ஒரு அடி மூன்று அங்குலஅளவில் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதேபோன்று தண்ணி முறிப்பு குளத்தின் மூன்று வான் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே குளங்கள் நிறைந்து காணப்படும் நிலையில் குளங்கள் பல வான் பாய்கின்றன. இதேவேளை நேற்றும் தொடர்ச்சியாக மழை பெய்தமையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)