
posted 19th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அவசர சேவை பிரிவு கட்டிடத் தொகுதி
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சேவை பிரிவுக்கான கட்டிடத் தொகுதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
இலங்கை தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத் தொகுதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர்.சகிலா இஸ்ஸதீன், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எம்.சீ.எம். மாஹிர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். கார்த்திகேயன் அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியாக மரங்களும் நட்டு வைக்கப்பட்டன.
அத்துடன் சீன செயற்றிட்டத்தின் மூலம் நடைபெறும் கட்டுமான பணிகளையும் குறித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பணிமனை குழுவினர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)