அகிலத்திருநாயகிகக்கு ஜனாதிபதி நேரில் பாராட்டு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அகிலத்திருநாயகிகக்கு ஜனாதிபதி நேரில் பாராட்டு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் அழைத்து பாராட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் பணிமனையில் சனிக்கிழமை (06) இந்த சந்திப்பு நடைபெற்றது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையை சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலத்திருநாயகிகக்கு ஜனாதிபதி நேரில் பாராட்டு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)