சட்ட விரோத செயல்கைள நிறுத்து - பேரணி

சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று ஞாயிற்றுக் கிழமை (29) காலை 11:30 மணியளவில் மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால் பேரணியாக சென்றது.

இதில் சிறுவர்களால்;

  • மரங்களை வெட்டி வளங்களை அழிக்காதே
  • மது போதையை கட்டுப்படுத்து
  • சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுத்து நிறுத்துங்கள்

உட்பட பல்வேறு பதாதைகள் ஏந்தியவாறு சென்றனர்.

இதில் மணல்காடு கிராமத்திற்க்குட்பட்ட , சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சட்ட விரோத செயல்கைள நிறுத்து - பேரணி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)