விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அ வேகக் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதுண்டுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ரவீந்திரன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House