
posted 8th January 2022
வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதால் சாரதிகள் வாகனங்களைச் செலுத்துவதில் பெரும் இடையூறுகளைச் சந்தித்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வாகனச்சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அண்மைக்காலமாக மழையுடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்டபோதிலும் தற்போது அதிக பனி மூட்டமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House