மீன்பிடி முறைகள்
மீன்பிடி முறைகள்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றபீக்கா அமீர்தீன் எழுதிய “மீன்பிடி முறைகள் - கல்முனை கடற்றொழில் மாவட்டம்” எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
ஆசிரியர் சஃபற்தலைமையில் ஒலுவில் “கிறீன் விலா” மண்டபத்தில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சூசை ஆனந்தன் பிரதம விருந்தினராகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக பொருளியல் துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநீதி ஏ.ஏ.எம்.நுபைல் முதன்மை விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

அத்துடன், தென்கிழக்கு பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் விரிவுரையாளர் எம்.எச்.எம். றினோஸ், மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நூலுக்கான நயவுரையை கவிஞரும், விரிவுரையாளருமான எஸ்.எ. ஜலால்தீன் ஆற்றினார்.

இந்த நூல் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு சிறந்த உசாத்துணை நூலாக அமையுமென நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்த்தர்கள் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி முறைகள்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House