
posted 25th January 2022
மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனையில் 7 பேருக்கு திங்கள் கிழமை (24.01.2022) கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் (01.2022) மன்னாரில் கொரோனா தொற்றாளர்கள் தொகை 56 ஆக உயர்ந்துள்ளது.
நோயினம் காணப்பட்டவர்களில், மன்னார் பொது வைத்தியசாலையில் 3 பேரும். முருங்கன் நானாட்டான் மற்றும் பேசாலை ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒருவருமாக மொத்தம் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்கள் கொவிட் தொடர்பாக நாளாந்தம் வெளியிடும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால் மன்னார் மாவட்டத்தில் ஐனவரி மாதம் (01.2022) கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டவர்களின் தொகை 56 ஆக உயர்ந்துள்ளது.
இம் மாதம் (ஜனவரி) மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட 2246 அன்டிஜென் பரிசோதனையிலேயே 56 கொவிட் தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தமாக 3239 கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House