பெரும்போக அறுவடை ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், ஓர் ஏக்கருக்கு 12 தொடக்கம் 15 வரையான மூட்டை நெல்லே கிடைக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறை இயற்கை எமக்கு கை கொடுத்துள்ளபோதிலும், இரசாயன உரம் கிடைக்காமையால் காலபோக பயிர் செய்கையில் தமக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த வருடத்தில் ஓர் ஏக்கரிலிருந்து 30 தொடக்கம் 40 வரையான மூட்டை நெல் அறுவடையாகக் கிடைத்தது. ஆனால், இம்முறை 12 முதல் 15 மூட்டை நெல்லே கிடைக்கிறது.

இருப்பினும் இம் முறை அரசாங்கம் கமநலசேவையின் ஊடாக வழங்கிய சேதன உரம் மற்றும் நைத்திரேற் உரம் என்பவற்றையே பயன்படுத்தினர் என்றும், இதனால், தமக்கு எந்த பலனும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்நிலை தொடருமாயின் காலபோக பயிர்செய்கையை புறக்கணிக்கபோவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

பெரும்போக அறுவடை ஆரம்பம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House