புதுவருட சிறப்பு நிகழ்வு

இலங்கையின் பிரபல வங்கிகளுள் ஒன்றான ஹற்றன் நஷனல் வங்கியின் நிந்தவூர்க்கிளையில், புதுவருட சிறப்பு நிகழ்வ ஒன்று விமரிசையாக நடைபெற்றது.

வங்கி முகாமையாளர் நடராஜா நந்த கோபன் தலைமையில் வங்கியின் பிராந்திய உயரதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பங்கு பற்றுதலுடன் இந்த சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய உயரதிகாரிகளான என். கேதீஸ்வரன் (தலைவர், வியாபாரப்பிரிவு) எஸ்.சத்தியசீலன் (கடன் பிரிவு) ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

கொடுக்கல், வாங்கல்களுடன், தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களுக்கான அனுமதிக்கப்பட்ட கடன் வழங்கல் பத்திரங்களும், அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

வியாபாரப் பிரிவுகக்கான பிராந்திய உயரதிகாரி என்.கேதீஸ்வரன் நிகழ்வில் உரையாற்றுகையில்,
இந்த வருடம் விவசாயத்துறைசார்ந்தோர், அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தகர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான குறைந்த வட்டியுடனான கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்.

முன்னேற்த்தின் பங்காளியாக வங்கி திகழுமெனவும் கூறினார்.

இந்த வகையில் மக்களுக்கு இந்த வங்கி மூலம் சிறந்த பயன்கள் கிடைக்கச் செயற்பட்டுவரும் வங்கி முகாமையாளர் நந்த கோபன் உட்பட வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கும் பலராலும் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

புதுவருட சிறப்பு நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House