
posted 31st January 2022
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பேருந்தில் இருந்து இறங்கியவர் கால் தடுமாறி விழுந்தவர் பஸ்ஸின் சில் தலைமீதேறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (30) முற்பகல்வேளை இடம்பெற்ற இந்த விபத்துக் குறித்து மேலும் அறியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நொக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஏ-9 வீதி, நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
அங்கு இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண்பிட்டியில் கால் வைத்த போது கால் தடுமாறி வீதியில் விழுந்துள்ளார். குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்காத பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது, அதன் பின்பக்க சில்லு தலைமீதேறியது. இதில் அந்தப் பெண் தலைநசியுண்டது.
அங்கிருந்து, வாகனம் ஒன்றின் மூலம் அந்தப் பெண்ணை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அந்தப் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House