
posted 6th January 2022
தடுத்து வைக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை
எல்லை தாண்டிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த மீனவர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நாகபட்டினம் கடல் பகுதியில் வைத்து கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் வடமராட்சியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அங்கு தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரையும் அவர்களின் படகுடன் விடுதலை செய்யுமாறு சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரக அதிகாரிகளிடம் இருவரும் கையளிக்கப்பட்டனர். அவர்களை இலங்கை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இடைநிறுத்தப்பட்ட பட்டத் திருவிழா
வல்வெட்டித்துறையில் வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தில நடத்தப்படும் பட்டத் திருவிழா இந்த ஆண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் வருடாந்தம் பட்டத் திருவிழா நடைபெறுவது வழமை. இந்த நிலையில், அந்தப் பகுதி மக்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவுக்கும் இடையில் நேேற்று புதன்கிழமை நடந்த கலந்துரையாடலின் பிரகாரமே பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கடந்த ஆண்டும் பட்டத் திருவிழா நடைபெறவில்லை. இதேபோன்று இந்த ஆண்டிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து பட்டத் திருவிழாவை இடைநிறுத்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்தே பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அண்மையில், இந்தப் பட்டத் திருவிழாவை இந்த ஆண்டு சர்வதேச பட்டத் திருவிழாவாக இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விடயம் பல எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House