
posted 5th January 2022
கல்வி நடவடிக்கைகள் அனைத்து பாடசாலைகளினதும் 10ஆம் திகதி முதல்
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளை சாதாரண நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதனையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கசிப்புடன் கைது
விசுவமடுபகுதியில் மோட்டார்சயிக்கிலில் சட்டவிரோத கசிப்பினை புதுக்குடியிருப்பு நோக்கி எடுத்துச்சென்ற சமயம் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய 04.01.2022 அன்றையதினம் இரவு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 21 லீற்றர் கசிப்பினை மிட்டுள்ளதுடன் சந்தேகநபரினைதருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் தருமபுரம் பொலிசார் சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House