
posted 29th January 2022
19 பவுண் தங்க நகை, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிருவை வீதி, அல்வாய் கிழக்கைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ப. பூரானந்தன் என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஓய்வு பெற்ற ஆசிரியரும், அவரது மனைவியும் வீட்டில் இருந்ததாகவும், அவர்கள் வழமையாகவே அதிகாலை 4 மணியளவில் எழுந்து தமது கடமைகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை (27) அதிகாலை 4 மணியளவில் எழுந்து தமது கடமைகளை செய்து கொண்டு இருந்ததாகவும், பின்னர் ஆறு மணி அளவில் அலுமாரி திறந்து இருந்ததை பார்த்தே திருட்டு இடம்பெற்றமை தெரியவந்ததாகவும் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House