
posted 26th January 2022
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி ஏற்றுள்ள டாக்டர்.ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எச்.கே. சனூஸ் புதிய பணிப்பாளரை வரவேற்றதுடன், வைத்தியசாலையைப் பார்வையிட்டு குறை நிறைகளையும் பணிப்பாளர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் பிராந்திய பணிப்பாளர் டாக்டர். றிபாசுடன், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். எம்.பி.அப்துல் வாஜித், திட்டமிடல் தலைமையக வைத்திய அதிகாரி டாக்டர். எம்.சீ.எம்.மாஹிர், ஆகியோரும் பணிப்பாளருடன் வருகை தந்து நிலமைகளை ஆராய்ந்தனர்.
இதன்போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சனூசுடன், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் பீ.எம். நசுறுடீன், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ. புஹாது, வைத்தியசாலை அபிவிருத்தி சங்கப் பிரதிநிதி ஐ.எல்.ஏ. மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டு வைத்தியசாலையின் தேவைகள், அபிவிருத்திகள் தொடர்பாக பணிப்பாளருக்கு எடுத்துக்கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இந்த வைத்தியசாலையை தொற்று நோய் தடுப்பு சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பான ஏதுநிலைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House