
posted 19th January 2022

கணேஷ் இந்துகாதேவி
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச் சண்டையில் சாதித்துவரும் கணேஷ் இந்துகாதேவி, பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தேர்வாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்ப்பட்ட 50 - 55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடிக்கொடுத்த இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House