
posted 8th February 2022
பேராதனை பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் எஸ். தில்லைநாதனுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி பெரும் கௌரவமளித்துள்ளது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று முதல் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய மூன்றாம் அமர்வின் போது பேராசிரியர் தில்லைநாதனுக்கு குறித்த கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது.
தென்கிழக்குபல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ரமீஸ் அபூபக்கர், இந்த கௌரவத்தை பட்டமளிப்பு விழா அமர்வில் பிரகடனம் செய்து பேராசிரியர் தில்லைநாதனுக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கினார்.
இதன்போது பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஆகியோர் சகிதம் கௌரவ கலாநிதி பட்டத்தை, மீயுயர் நீதிமன்ற (உயர்நீதிமன்ற) நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ், மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், துறைசார் தலைவர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் வழங்கி கௌரவித்தார்.
தனக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம் அளித்த இப்பெரும் கௌரவத்தை நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்த தகைசார் பேராசிரியர் தில்லைநாதன், தான் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபை இச்சந்தரப்பத்தில் நினைவு கூர்வதாகவும் தெரிவித்தார்.
அரசியல் தலைவராக மர்ஹூம் அஷ்ரப் மிளிர்வதற்கு முன்னரே இலக்கியப் பரப்பில் அவருடன் நெருக்கம் கொண்டிருந்ததாகவும் தகைசார் பேராசிரியர் தில்லைநாதன் உணர்வு பூர்வமாகத் தேனாரம் செய்தியாளரிடம் கூறினார்.
இதேவேளை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவின் இறுதி நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி காலை அமர்வில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், இப்பல்கலைக்கழக வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய வருமான ஜௌபர் சாதிக் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House