ஜெயந்திபுரத்தில் வாள்வெட்டு; 7 பேர் பொலிஸாரினால் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள் கத்தியுடன் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர் என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பிரதேசத்திலுள்ள சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞர் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்ணை காதலித்து வரும் இளைஞர் அவரது குழுவினருடன் பெண்ணின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்த நிலையில் 7 பேரை நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களிமிருந்து வாள் மற்றும் கத்திகளையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெயந்திபுரத்தில் வாள்வெட்டு; 7 பேர் பொலிஸாரினால் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House