சேதப்படுத்தப்பட்ட முள்ளியவளை - தண்ணீரூற்று பொதுசந்தை - மூவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை - தண்ணீரூற்று பொதுசந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தண்ணீரூற்று பொதுச்சந்தை மீது கடந்த 24ஆம் திகதி அதிகாலை நான்கு பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதன்போது சந்தையின் காவலாளியான 60 வயதுடைய நபர் காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சந்தையை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பில் எழுந்த பிரச்னையின் விளைவாக நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று பொதுச் சந்தைக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முள்ளியவளை உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்தார்.

தாக்குதல் நடத்தியமை சி.சி.ரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேதப்படுத்தப்பட்ட முள்ளியவளை - தண்ணீரூற்று பொதுசந்தை - மூவர் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House