சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் மறியலில்

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர், 14 நாள்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாங்குளம் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காக திருகோணமலையை சேர்ந்த இளைஞன் அங்கு வந்துள்ளார். அவர் தங்குவதற்காக மாங்குளம், புதிய கொலனி கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன், வீடு ஒன்றும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை, மூதூர் பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியையும் அவரின் விருப்பத்தின்பேரில் அழைத்துவந்து சுமார் ஒரு மாதகாலமாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தமையை அடுத்து, சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இளைஞனை மாங்குளம் பொலிஸார் கைதுசெய்தனர். அத்துடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசல் தலத்தில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் மறியலில்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House