
posted 31st January 2022
யாழ்ப்பாணத்தில் இன்று 16 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது.
இதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 15 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையில் மேலும் 20 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், 29.01.2022 அன்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கோவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,420 ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House